sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்; அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு... அரசுக்கு அவப்பெயர்!

/

நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்; அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு... அரசுக்கு அவப்பெயர்!

நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்; அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு... அரசுக்கு அவப்பெயர்!

நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்; அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு... அரசுக்கு அவப்பெயர்!


ADDED : ஆக 01, 2024 12:44 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : 'நகராட்சி அதிகாரிகள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்; எந்த வேலையும் சரியாக செய்வதில்லை. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறீர்கள்,' என, பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

பொள்ளாச்சி நகராட்சி கவுன்சில், சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் தலைமை வகித்தார். கமிஷனர் (பொ) செந்தில்குமரன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

துணை தலைவர் கவுதமன்: நகராட்சிக்கு சொந்தமான வரியில்லா இனங்களின், ஆண்டு குத்தகை இனத்தில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஏலம் விடாமல் இருந்து, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

கவுன்சிலர் செந்தில் (தி.மு.க.,): கழிப்பிடம் உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் யார் வசூலித்தது; எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்.

அதிகாரிகள்: கழிப்பிடத்துக்கு கட்டணம் வசூலிக்க ஏலம் விட தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை வாயிலாகத்தான் இதுவரை வசூலிக்கப்பட்டது.

துணை தலைவர்: இத்தனை ஆண்டுகள் ஏன் ஏலம் விடவில்லை. இதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அதிகாரிகள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்; எந்த வேலையும் சரியாக செய்வதில்லை. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுகிறீர்கள். வருவாய்துறை என்பது, நகராட்சிக்கு வருவாய் இனங்களை கண்காணித்து வசூலிக்க வேண்டும். அந்த வேலையை கூட சரியாக செய்யாமல் இருக்கின்றனர்.

செந்தில்: எந்த துறையிலும் வேலை நடக்கவில்லை; பணம் கொடுத்தால் தான் வேலை செய்கின்றனர் என்பதை பதிவு செய்கிறேன்.

பெரும்பாலான கவுன்சிலர்கள் பேசியதாவது: பஸ் ஸ்டாண்டில் வருமானம் வந்த கடை, பூட்டப்பட்டுள்ளது. இதுவரை ஏலம் விடவில்லை. காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகள், ரயில்வே ஸ்டேஷன் பகுதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளும் ஏலம் விடாமல் உள்ளனர். இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

ஜேம்ஸ்ராஜா (அ.தி.மு.க.,): தேர்நிலையம் மார்க்கெட் கடைகள் கட்டப்பட்டுள்ளன. பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா. புதியதாக கட்டப்படும் பஸ் ஸ்டாண்டுக்கு எந்த பஸ்கள் செல்லும் என்பதை விளக்க வேண்டும்.

கமிஷனர்: சட்டப்படி தான் ஏலம் விடப்படும். பொது ஏலமாகத்தான் விடப்படும்.

இவ்வாறு, கவுன்சிலில் விவாதம் நடந்தது.

அதிகாரிகள் திணறல்


ஏலம் குறித்த தகவல்கள் தெரிவிப்பதில்லை; அதிகாரிகள் முறையாக பணிகளில் ஈடுபடுவதில்லை என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, துணை தலைவர், கவுன்சிலர்கள் பேசினர். இதற்கு அதிகாரிகள் முறையாக தகவல் தெரிவிக்க முடியாமல் திணறினர்.

கொஞ்சம் பாருங்க!

நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், 2,500 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனையில், 3,500 சதுரடி வரையிலான தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம், குடியிருப்புக் கட்டடங்கள் கட்ட சுயசான்றின் அடிப்படையில் இணைய வழி கட்டட அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு செலுத்த வேண்டிய ஒருங்கிணைந்த கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டது.இந்த தீர்மானம் கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது.இதுபற்றி கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா பேசுகையில், ''கட்டணம் நிர்ணயம் என மட்டும் உள்ளது. எவ்வளவு கட்டணம் என தெரிவிக்க வேண்டும். தற்போது, ஆயிரம் சதுர அடிக்கு, 36 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும். புதிய தீர்மானத்தின் படி, 72 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய நிலை உருவாகும். ஏற்கனவே, நகராட்சியில் சொத்து வரி, காலியிட வரி அதிகமாக உள்ளது. தற்போது இந்த கட்டணமும் உயர்ந்தால் மக்கள் பாதிக்கப்படுவர்,'' என்றார்.நகராட்சி நிர்வாகத்தினர் பேசுகையில், 'வரி உயர்வின் போது, முதல்வரிடம் தெரிவித்து குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோன்று கட்டணம் அதிகமாக இருந்தால், குறைக்க நிர்ணயிக்க அரசுக்கு வலியுறுத்தப்படும்,' என்றனர்.








      Dinamalar
      Follow us