தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்:கோவை

 கிரைம் கார்னர்:கோவை

 கிரைம் கார்னர்:கோவை


ADDED : செப் 07, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலி பாட்டில் தருவதில் தகராறுடாஸ்மாக் பணியாளர் மீது தாக்குதல் வடவள்ளி: வீரகேரளம் டாஸ்மாக் கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, விற்பனையாளர் சரவணக்குமார் பணியில் இருந்தனர். அப்போது மதியழகன், சேசராஜ் மற்றும் சீரநாயக்கன்பாளையம் சங்கர் ஆகியோர் காலி பாட்டிலை திரும்ப கொடுக்க வந்தனர். முன்பக்கமாக சென்று பாட்டிலை கொடுக்க கூறிய பணியாளரை, சங்கர் பீர்பாட்டிலால் தாக்கினார். அருகிலிருந்தவர்கள் சங்கரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வடவள்ளி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

போன் பேசுவது போல்பறித்து ஓடியவர் கைது காந்திபுரம்: பெரியநாயக்கன்பாளையத்தில் தங்கி பணிபுரிபவர் சேலத்தை சேர்ந்தவர் பிரபாகரன். சேலத்தில் இருந்து தங்கை மகன் தீனாவுடன் காந்திபுரம் வந்தார். பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கிய போது, அடையாளம் தெரியாத ஒருவர் வீட்டுக்கு போன் செய்ய போனை கேட்டார். பேசுவது போல் நடித்தவர் திடீரென ஓட்டம் பிடித்தார். ஈரோடு பஸ்சில் ஏற முயன்ற அந்நபரை பிடித்து காட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து 3 போன், ரூ.1200 கைப்பற்றப்பட்டது. விசாரணையில், திருடியது சிவகங்கையை சேர்ந்த கோவிந்தன் என தெரிந்தது; அவர் கைது செய்யப்பட்டார்.

புகையிலை பொருட்கள் விற்றமூன்று பேர் மீது வழக்கு பதிவு துடியலுார்: போலீசார் ரோந்து பணியின் போது, அப்பநாயக்கன்பாளையத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்களிடம், 22.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தென்காசியை சேர்ந்த தாமஸ் மற்றும் இளங்கோ ஆகியோரை கைது செய்தனர்.

* சரவணம்பட்டியில், புதுக்கோட்டை கார்த்திக் என்பவரை ரோந்து பணியின் போது கைது செய்து, 85 புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

* சரவணம்பட்டி - காளப்பட்டி ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்ற சின்னவேடம்பட்டி தியாகராஜன் என்பவரை கைது செய்தனர். 1.2 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

57 அனாதை வாகனங்களின் உரிமையாளர் மீது வழக்கு குனியமுத்துார்: கோவைபுதூரிலுள்ள அபார்ட்மென்ட் பின்புறம் காலியிடம் உள்ளது. இவ்விடத்தில் இரு, நான்கு சக்கர வாகனங்கள் மாதக்கணக்கில் கேட்பாரற்று நிறுத்தப்படுவதாக, குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.தாமரைகண்ணன், கடந்த, மே 17 முதல் நேற்று முன்தினம் வரை கண்காணித்து, 57 வாகனங்களை பறிமுதல் செய்தார்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. யாரும் வாகனங்களுக்கு உரிமை கோரவில்லை. வாகனங்கள் குறித்த விவரங்களை ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us