sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பட்டக்காரனுார் குட்டையில் சிக்கிய முதலை

/

பட்டக்காரனுார் குட்டையில் சிக்கிய முதலை

பட்டக்காரனுார் குட்டையில் சிக்கிய முதலை

பட்டக்காரனுார் குட்டையில் சிக்கிய முதலை


ADDED : ஜூலை 09, 2025 10:17 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனுார் கிராமத்தில், மழை நீர் தடுப்பனை குட்டையில் உலா வந்த முதலையை, வனத்துறையினர் பிடித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் மழை நீர் தடுப்பணை குட்டை ஒன்று உள்ளது. இக்குட்டையில் கடந்த சில நாட்களாக முதலை ஒன்று உலா வந்தது. இரவு நேரங்களில் குட்டையின் கரையோரம் முதலை இரை தேடி செல்வதை மக்கள் பார்த்து அச்சமடைந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் வனவர் சிங்காரவேலன் தலைமையிலான வனத்துறையினர், நேற்று சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு முதலை இருப்பதை உறுதி செய்தனர்.

அதனை தொடர்ந்து குட்டையை சுற்றி வலைகளை விரித்து, முதலை தண்ணீரில் இருந்து வெளியே சென்று விடாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர். பின், குட்டையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் உடன் வன ஆர்வலர்களும் கைகோர்த்து, சுறுக்கு வைத்து முதலையை பிடித்தனர்.

இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில்,வன மருத்துவர்கள் ஆலோசனைக்கு பிறகு பவானி சாகர் நீர் தேக்க பகுதியில் முதலையை விட முடிவு செய்துள்ளோம். பிடிபட்ட முதலை பெண் முதலை. சுமார் 6 அடி நீளம் கொண்டது, என்றனர்.






      Dinamalar
      Follow us