sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பயிர் பாதுகாப்பு வயல் விழா; தக்காளியில் பாதிப்பு தடுக்க வழி

/

பயிர் பாதுகாப்பு வயல் விழா; தக்காளியில் பாதிப்பு தடுக்க வழி

பயிர் பாதுகாப்பு வயல் விழா; தக்காளியில் பாதிப்பு தடுக்க வழி

பயிர் பாதுகாப்பு வயல் விழா; தக்காளியில் பாதிப்பு தடுக்க வழி


ADDED : ஜன 29, 2025 11:15 PM

Google News

ADDED : ஜன 29, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் தைவான், உலக காய்கறி மையம் இணைந்து, தாவர நல முனைப்பு நிதி உதவியுடன், தக்காளி மற்றும் அவரை பயிர்களில், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தக்காளியை நோய் எதிர்ப்பு திறனுடன் உடைய, கத்திரி ரகத்தின் வேர்ப்பகுதியுடன் இணைத்து ஒட்டுக்கட்டுவதன் வாயிலாக, மழை காலங்களில் தக்காளியை தாக்கும் பூஞ்சாண மற்றும் பாக்டீரியல் நோய்களிலிருந்து பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை, உலகக் காய்கறிகள் மையம் கண்டறிந்துள்ளது.

இத்தொழில்நுட்பம் குறித்த ஆய்வுத்திடல், மதுக்கரை மார்க்கெட் அடுத்துள்ள சட்டக்கல்புதுார் கிராமத்தில், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வுத்திடல் பின்பற்றிய தொழில்நுட்பங்களை, மற்ற விவசாயிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வகையில், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழா, ஆய்வுத்திடலில் நடந்தது. வேளாண் பல்கலைக் கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி, நோயியல் துறை பேராசிரியர் அங்கப்பன், பூச்சியியல் துறை பேராசிரியர் முருகன், பல்கலைக் கழக பயிற்சி மைய பேராசிரியர் ஆனந்தராஜா, தாவர உயிர்த் தொழில் நுட்பவியல் விஞ்ஞானி மணிகண்ட பூபதி உட்பட பலர் பேசினர்.

திட்டத்தை செயல்படுத்திய விவசாயி நாகரத்தினசாமி, தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்றனர்.






      Dinamalar
      Follow us