
தேவையான பொருட்கள்: n கறிவேப்பிலை - இரண்டு கப் n புளி - ஒரு எலுமிச்சை அளவு n உப்பு - தேவையான அளவு n நெய் அல்லது எண்ணெய் - இரண்டு டீ ஸ்பூன் n கடுகு, சீரகம் - ஒரு டீ ஸ்பூன் வறுத்து அரைக்க: n உளுந்தம் பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன் n மிளகு - அரை டீஸ்பூன் n காய்ந்த மிளகாய் - ஆறு - எட்டு n தனியா, கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை: வறுத்து அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒவ்வொன்றாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். இதனோடு, பிரஷ்ஷான கறிவேப்பிலையைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்துத் தாளித்து, கரைத்து வைத்திருக்கும் புளியை அதில் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை இந்தக் கலவையை சுமார் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஏற்கெனவே அரைத்து வைத்திருக்கும் கறிவேப்பிலை விழுதை இத்துடன் கலந்து, நன்கு கொதித்து உங்களுக்குத் தேவையான பதம் (அடர்த்தியாகவோ கொஞ்சம் நீர் நிலையிலோ) வந்தபிறகு இறக்கிவிடலாம்.இப்போது சுவை மற்றும் ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை குழம்பு தயார். புளிக்குப் பதிலாக மாங்காய் சேர்த்தும் இந்த குழம்பைச் செய்யலாம்.
காய்கறி எதுவும் இல்லாமல் மலிவான விலையில் சுவையான சத்தான உணவாக கறிவேப்பிலை குழம்பு அமையும். ஒருமுறை செய்து பார்த்தால், உங்களுக்கு இது பிடித்துப் போகும்.

