sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆபத்தான மரத்தை வெட்டுங்க; நுாலக வாசகர்கள் கோரிக்கை

/

ஆபத்தான மரத்தை வெட்டுங்க; நுாலக வாசகர்கள் கோரிக்கை

ஆபத்தான மரத்தை வெட்டுங்க; நுாலக வாசகர்கள் கோரிக்கை

ஆபத்தான மரத்தை வெட்டுங்க; நுாலக வாசகர்கள் கோரிக்கை


ADDED : மே 31, 2025 12:09 AM

Google News

ADDED : மே 31, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில் உள்ள நுாலகத்தை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாசகர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். போட்டி தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்கள் நுாலகத்துக்கு வந்து படிக்கின்றனர்.

இந்நிலையில், நுாலகத்தின் முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்ட வேண்டும் என, பல ஆண்டுகளாக வாசகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நுாலகத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

வாசகர்கள் கூறுகையில், 'வால்பாறையில் தற்போது காற்றுடன் மழை பெய்கிறது. நுாலகத்தின் முன்பாக உள்ள மரத்தால், அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது. இதனால், வாசகர்கள், பஸ் ஸ்டாண்ட் பகுதி வியாபாரிகள் அச்சத்துடன் உள்ளோம். மரம் விழுந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன், மரத்தை வெட்டி அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us