/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும்
/
கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும்
ADDED : ஆக 01, 2025 03:29 PM
சென்னை: 'தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில், சூறாவளிக்காற்று வீசக்கூடும். உள்மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னலுடன், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில், பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 6ம் தேதி வரை, மிதமான மழை தொடரலாம். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார்,விழுப்புரம்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்காரைக்கால் பகுதிகளிலும், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று இன்றுமணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.