sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பரளிக்காடு சூழல் சுற்றுலா செல்ல 50 பேர் வந்தால் தினமும் அனுமதி

/

 பரளிக்காடு சூழல் சுற்றுலா செல்ல 50 பேர் வந்தால் தினமும் அனுமதி

 பரளிக்காடு சூழல் சுற்றுலா செல்ல 50 பேர் வந்தால் தினமும் அனுமதி

 பரளிக்காடு சூழல் சுற்றுலா செல்ல 50 பேர் வந்தால் தினமும் அனுமதி


ADDED : ஜன 02, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரமடை: காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.

வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது .

பரளிக்காடு வரும் சுற்றுலா பயணிகள் https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக புக் செய்து கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து தான் வரவேண்டும். நேரடியாக வர அனுமதியில்லை. சனி, ஞாயிறு மட்டுமே இயங்கும்.

சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்கள் சார்பில் வழங்கப்படும் 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அத்திக்கடவு ஆற்றில் குளியல், பழங்குடியினர் நடனம் என வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக பரளிக்காடு உள்ளது.

காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது :

பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பரிசல் பயணத்தை சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் மேற்கொள்கின்றனர். புக்கிங்கிற்கு 50 பேர் சேர்ந்தால் வார நாட்களிலும் கூட அனுமதி அளிக்கப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us