தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கடன் தொல்லை; வியாபாரி தற்கொலை

கடன் தொல்லை; வியாபாரி தற்கொலை

கடன் தொல்லை; வியாபாரி தற்கொலை


ADDED : ஜன 03, 2025 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2025 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கடன் தொல்லையால் தேங்காய் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து, வடக்கிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பொள்ளாச்சி அருகே, கோவிந்தனுார் பாறை மேட்டை சேர்ந்தவர் முருகன், 50. இவர், தேங்காய் வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர், வெளியில் பலருக்கு கொடுத்த பணமும் திரும்பி வரவில்லை. கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிலும் நஷ்டம் ஏற்பட்டதால், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

அவரை மீட்டு உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். வடக்கிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us