/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மஞ்சூர் சாலையில் ரோந்து அதிகரிக்க முடிவு
/
மஞ்சூர் சாலையில் ரோந்து அதிகரிக்க முடிவு
ADDED : மார் 01, 2024 12:07 AM
மேட்டுப்பாளையம்;காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட மஞ்சூர் சாலையில், ரோந்துப் பணிகளை அதிகரிக்க, காரமடை வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
காரமடையில் இருந்து வெள்ளியங்காடு வழியாக குண்டூர், முள்ளி, மஞ்சூர், கெத்தை, பில்லுார் அணை உட்பட பகுதிகளுக்கு செல்லும் சாலையில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
தற்போது கோடைகாலம் நெருங்கியுள்ள நிலையில், வெள்ளியங்காட்டில் இருந்து மஞ்சூர் வரை வனவிலங்குகள் தண்ணீரை தேடி சாலையில் அடிக்கடி உலா வருகின்றன. வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வகையில், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரமடை வனத்துறையினர் கூறுகையில், 'இச்சாலை, அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே செல்வதால், வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4 குழுக்கள் வாயிலாக சுழற்சி முறையில் வனத்துறையினர் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
ரோந்துப் பணியை தீவிரப்படுத்த, கூடுதலாக 2 குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.---

