sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆஷா பணியாளர்களை நிரந்தரமாக்க கோரிக்கை

/

ஆஷா பணியாளர்களை நிரந்தரமாக்க கோரிக்கை

ஆஷா பணியாளர்களை நிரந்தரமாக்க கோரிக்கை

ஆஷா பணியாளர்களை நிரந்தரமாக்க கோரிக்கை


ADDED : ஜன 14, 2025 09:23 PM

Google News

ADDED : ஜன 14, 2025 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, இ.கம்யூ., கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

வால்பாறை தாலுகா இ.கம்யூ., கட்சி செயலாளர் மோகன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், ஆஷா பணியாளர்கள், விடுப்பின்றி, 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து சுகாதார திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றனர்.

வால்பாறையில் மட்டும், 45 பேர் ஆஷா பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் கொரோனா தொற்று காலத்திலும் முன்களப்பணியாளர்களாக பணியாற்றி உள்ளனர்.

இவர்களுக்கு, தற்போது மாதம் தோறும், 5,750 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. குறைவான ஊதியத்தால் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.

எனவே, 15 ஆண்டுகளுக்கு மேலாக கிராமப்புற செவிலியர்களுக்கு, நிகராக பணியாற்றி வரும் ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாத சம்பளமாக, 18 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us