sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாற்றுத்திறனாளிகள் பணியை பறிக்கும் அரசாணையை  திரும்ப பெற கோரிக்கை

/

மாற்றுத்திறனாளிகள் பணியை பறிக்கும் அரசாணையை  திரும்ப பெற கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள் பணியை பறிக்கும் அரசாணையை  திரும்ப பெற கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள் பணியை பறிக்கும் அரசாணையை  திரும்ப பெற கோரிக்கை


ADDED : நவ 08, 2025 01:17 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் அரசாணை எண்: 24ஐ அரசு திரும்பப்பெறுமாறு, தேசிய பார்வையற்றோர் இணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன் கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அக்., 31ம் தேதி அரசாணை எண்: 24ஐ வெளியிட்டது. 2008 முதல் அரசுத் துறைகளில் தற்காலிகமாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது; இது முற்றிலும் முரண்பாடானாது. 2008ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அரசாணை எண்:151ஐ வெளியிட்டார். அ தன்படி அரசு துறைகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட, மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் தற்காலிகமாக பணிபுரிபவர்களுக்கு தேர்வு நடத்துவது என்பது, மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி, மன உளைச்சலுக்கு தள்ளுகிறது.

இந்த அரசாணையின்படி நடத்தப்படும் தேர்வு முறை, 25 வயது நபருடன், 50 வயது கடந்தவர்களை ஓடச்சொல்லி, அவர்களை கீழே தள்ளி அரசு வேடிக்கை பார்ப்பது போல் அமைந்துள்ளது.

ஏற்கனவே, வேலை தொடர்பான அரசாணை எண்:21 என்பது, பார்வை மாற்றுத்திறனாளிகளை கேவலமாக சித்தரித்தது. அவல நிலைக்கு தள்ளப்பட்டதால், கோர்ட்டை அணுகினோம். அந்த அரசாணையை அரசு திரும்ப பெற்றது. 15 நாட்களுக்குள் அரசாணை: 24ஐயும் அரசு திரும்பப் பெற வேண்டும். தவறினால் கோர்ட்டை அணுகுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us