ADDED : ஜூலை 27, 2026 04:10 AM

அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: கோவில்களில், தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்ட கோவை செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். கோவை வடக்கு இந்து முன்னணி சார்பில், நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் பேசினார்.
