sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரம்

/

டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரம்

டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரம்

டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரம்


ADDED : மே 21, 2025 11:29 PM

Google News

ADDED : மே 21, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், டெங்கு கொசு தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் மாலைமற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மழைநீர் தேங்கும் பட்சத்தில் அதில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும், காரமடை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் உள்ள 500க்கும் மேற்பட்ட தெருகளில், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வின்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் வளராமல் இருக்க, அபேட் மருந்து ஊற்றுகின்றனர். மேலும், டயர், தேங்காய், மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை அப்புறப்படுத்த வலியுறுத்துகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கட்டடத்தின் மேல் பகுதியில் மழைநீர் தேங்கி இருந்தால், அதில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்தால், அதனை அழித்தும், கொசு புழுக்கள் உற்பத்தியானால் அபராதம் விதிக்கப்படும் எனவும் கட்டட உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.--






      Dinamalar
      Follow us