sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வருமானம் இல்லாததால்  விரக்தி; கணவன், மனைவி தற்கொலை: பொள்ளாச்சி அருகே சோகம்

/

வருமானம் இல்லாததால்  விரக்தி; கணவன், மனைவி தற்கொலை: பொள்ளாச்சி அருகே சோகம்

வருமானம் இல்லாததால்  விரக்தி; கணவன், மனைவி தற்கொலை: பொள்ளாச்சி அருகே சோகம்

வருமானம் இல்லாததால்  விரக்தி; கணவன், மனைவி தற்கொலை: பொள்ளாச்சி அருகே சோகம்


ADDED : ஏப் 01, 2025 06:44 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, போதிய வருமானம் இல்லாததால், கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக்,33; அவரது மனைவி வினோபா,32, 14 மற்றும் 12 வயதுள்ள இரு மகன்களுடன் வசித்து வந்தார்.

அவர், திருப்பூரில் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டுக்கு முன், பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் உள்ள அவரது சகோதரியின் ேஹாட்டலில் வேலை பார்த்துக்கொண்டு, கவனித்து வந்தார்.

இவர்களது இரு மகன்களும், விடுமுறை என்பதால் வால்பாறையில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டுக்கு சென்றனர். ஆனால், காலையில் நீண்டநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கவில்லை.

அருகே இருந்த உறவினர்கள், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, கணவன், மனைவி இருவரும் துாக்கிட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து, கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவ இடத்துக்கு, ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங் நேரில் சென்று ஆய்வு செய்து, தற்கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து விசாரித்தார். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

போலீசார் கூறுகையில், 'போதிய வருமானம் இல்லாததால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்துள்ளது. குழந்தைகள் பாட்டி வீட்டுக்கு சென்ற நிலையில், இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து, உறவினர்களிடம் விசாரிக்கப்படுகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us