UPDATED : ஆக 11, 2026 09:27 PM
ADDED : ஆக 11, 2026 09:24 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்:தேவராயபுரம் ஊராட்சியில், புள்ளாக்கவுண்டன்புதூர் முதல் கொண்டையம்பாளையம் பள்ளம் வரை, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் சாலை அமைக்கும் வேலையை கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார்.
பின், பச்சான்வயல் பழைய பதியில், 2.32 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பால பணிகளை ஆய்வு செய்தார். நரசீபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கற்று தரப்படும் கல்வி முறைகள் மற்றும் தேர்ச்சி விகிதம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்புகளை ஆய்வு செய்தார். விராலியூரில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், பால் கொள்முதல் விவரங்கள், உறுப்பினர் விவரங்களை கேட்டறிந்தார்.
