ADDED : ஏப் 12, 2025 02:06 AM
அ நிறம் | அளவு
கோவை:கோவை மாவட்டம் பூண்டி, வெள்ளியங்கிரி மலையில் ஈசனை தரிசித்து விட்டு, இறங்கிக்கொண்டிருந்த பக்தர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ்,42; தனியார் வங்கி ஊழியர். மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனது நண்பர்களுடன், கடந்த 9ம் தேதி இரவு, கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிவிட்டு, நேற்று அதிகாலை, கீழே இறங்கிக்கொண்டிருந்தார்.
ஆறாவது மலை இறங்கும்போது, ரமேஷ் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். அருகிலிருந்தவர்கள் மீட்டு, வனத்துறையினரின் உதவியுடன், அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ரமேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
