/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீனாட்சி கோவிலில் காவலர் மீது பக்தர்கள் தாக்குதல்
/
மீனாட்சி கோவிலில் காவலர் மீது பக்தர்கள் தாக்குதல்
ADDED : ஏப் 03, 2025 02:20 AM
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு அம்மன் சன்னிதிக்கு செல்ல ஆடி வீதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது ஆந்திர பக்தர் ஒருவர் திடீரென தடுப்பு மீது ஏறி வரிசைக்குள் புகுந்தார். இதை கவனித்த கோவில் காவலரும், ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான சுந்தர பாண்டி அவரை கண்டித்தார்.
அவருக்கும், பக்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வரிசையில் நின்றிருந்த ஆந்திரா பக்தர்கள் சிலர் தாக்கியதில் சுந்தரபாண்டியின் மூக்கில் ரத்தம் வழிந்தது.
உடனடியாக அவரை அங்கிருந்த சக ஊழியர்கள் முதலுதவி மையத்திற்கு அழைத்துச் சென்றனர். சம்பந்தப்பட்ட ஆந்திர பக்தர்களிடம் போலீசார் விசாரித்தனர். அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

