/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்பிறை ஏகாதசி விழா: பக்தர்கள் தரிசனம்
/
வளர்பிறை ஏகாதசி விழா: பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 21, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே டி. கோட்டாம்பட்டி பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசி விழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே டி. கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி விழா நடந்தது. விழாவையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தாயாருடன், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.