sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.43 லட்சம் காணிக்கை

/

வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.43 லட்சம் காணிக்கை

வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.43 லட்சம் காணிக்கை

வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.43 லட்சம் காணிக்கை


ADDED : ஆக 07, 2025 10:49 PM

Google News

ADDED : ஆக 07, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை,பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணுவது வழக்கம்.

அதன்படிநேற்று கோவில் வளாகத்தில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்தன. ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உதவி கமிஷனர் முத்துராமலிங்கம் தலைமையிலும், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, மேட்டுப்பாளையம் கோவில்களின் ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணிகள் நடந்தன.

தன்னார்வலர்களும், வி.என்.கே., மகளிர் கல்லூரி மாணவிகள், காரமடை சக்தி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 20 நிரந்தர உண்டியல்களில், 22 லட்சத்து, 76 ஆயிரத்து, 60 ரூபாயும், இரண்டு தட்டு காணிக்கை உண்டியலில், 14 லட்சம், 16 ஆயிரத்து, 934 ரூபாய் இருந்தது. திருவிழாவிற்காக தற்காலிகமாக வைத்த உண்டியலில், 6 லட்சத்து, 13 ஆயிரத்து, 626 ரூபாய் பக்தர்களின் காணிக்கை இருந்தது. உண்டியலில் தங்கம், 58 கிராம், வெள்ளி, 90 கிராம் இருந்தது. மொத்த காணிக்கையாக, 43 லட்சத்து, 6 ஆயிரத்து, 620 ரூபாய் இருந்தது.






      Dinamalar
      Follow us