sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தமிழ் புத்தாண்டு நாளில் வெள்ளியங்கிரி ஈசனை தரிசிக்க திரண்டு வந்த பக்தர்கள்

/

தமிழ் புத்தாண்டு நாளில் வெள்ளியங்கிரி ஈசனை தரிசிக்க திரண்டு வந்த பக்தர்கள்

தமிழ் புத்தாண்டு நாளில் வெள்ளியங்கிரி ஈசனை தரிசிக்க திரண்டு வந்த பக்தர்கள்

தமிழ் புத்தாண்டு நாளில் வெள்ளியங்கிரி ஈசனை தரிசிக்க திரண்டு வந்த பக்தர்கள்


ADDED : ஏப் 14, 2025 11:18 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், தமிழ் புத்தாண்டை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள, மலைத்தொடரின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல், வனத்துறையினர் பக்தர்கள் மலையேற அனுமதி அளித்து வருகின்றனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, அதிகாலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார், விநாயகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் இரவு முதலே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற துவங்கினர். சித்திரை முதல் நாளையொட்டி, காவடி எடுத்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.






      Dinamalar
      Follow us