sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆடிப்பூர தேர் விழா பக்தர்கள் பக்தி பரவசம்

/

ஆடிப்பூர தேர் விழா பக்தர்கள் பக்தி பரவசம்

ஆடிப்பூர தேர் விழா பக்தர்கள் பக்தி பரவசம்

ஆடிப்பூர தேர் விழா பக்தர்கள் பக்தி பரவசம்


ADDED : ஜூலை 29, 2025 08:30 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 08:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆண்டாள் திருநாச்சியார் சமேத ரங்க மன்னார் திருக்கோவிலில் ஆடிப்பூர திருத்தேர் உலா நிகழ்ச்சி நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட சாமநாயக்கன்பாளையத்தில் ஆண்டாள் திருநாச்சியார் சமேத ஸ்ரீ ரங்க மன்னார் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பூர திருத்தேர் விழா நடந்தது.

விழாவையொட்டி, காலை, 6:00 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம் நடந்தது.

காலை,10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மதியம், 1:00 மணிக்கு அன்னதானம், 2:00 மணிக்கு திருத்தேர் உலா நடந்தது. மாலை, 4:30 மணிக்கு ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் திருமஞ்சனம், மாலை, 5:30 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடி மாதம், 13ம் நாளையொட்டி நேற்று செவ்வாய்க்கிழமை காலை, 10:00 மணிக்கு சுதர்சன திருமஞ்சனம், 11:00 மணிக்கு கொடி இறக்குதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us