/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்தி ரோட்டை அகலப்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்த 'டிஜிட்டல் சர்வே' துவங்கியது
/
சத்தி ரோட்டை அகலப்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்த 'டிஜிட்டல் சர்வே' துவங்கியது
சத்தி ரோட்டை அகலப்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்த 'டிஜிட்டல் சர்வே' துவங்கியது
சத்தி ரோட்டை அகலப்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்த 'டிஜிட்டல் சர்வே' துவங்கியது
ADDED : மார் 27, 2025 11:58 PM

கோவை: கோவை டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை வரை, 1.2 கி.மீ., துாரத்துக்கு சத்தி ரோட்டை அகலப்படுத்துவதற்கான நிலங்களை கையகப்படுத்த, 'டிஜிட்டல் சர்வே' நேற்று துவங்கியது.
கோவை - சத்தி ரோட்டில், டெக்ஸ்டூல் பாலம் முதல் சரவணம்பட்டி வரை, 3.4 கி.மீ., துாரத்துக்கு அகலப்படுத்தும் பணியை, தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ள இருக்கிறது. இதற்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதே வழித்தடத்தில், வலியாம்பாளையம் பிரிவு வரை, 14.4 கி.மீ., துாரத்துக்கு 'மெட்ரோ ரயில்' இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான துாண்கள் துளையிடுவதற்கு, நிலத்துக்குள் பதித்திருக்கிற குடிநீர், பாதாள சாக்கடை, காஸ் குழாய்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒயர்களை அகற்றி, ரோட்டின் எல்லைக்கு 'ஷிப்ட்' செய்ய வேண்டியுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் இயக்குவதற்கு, 24 மீட்டர் அகலத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த வேண்டும். இப்பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறது.
முதல்கட்டமாக, டெக்ஸ்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை வரை, 1.2 கி.மீ., துாரத்துக்கு நிலம் கையகப்படுத்திக் கொடுக்க, 154 கோடி ரூபாய் ஒதுக்க, சென்னை 'மெட்ரோ ரயில்' நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, நிலம் கையகப்படுத்துவதற்கான 'டிஜிட்டல் சர்வே' பணி, டெக்ஸ்டூல் பாலம் அருகே நேற்று துவக்கப்பட்டது. நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகரமைப்பு அலுவலர்கள் கோவிந்த பிரபாகரன், சத்யா, மெட்ரோ ரயில் நிறுவனத்தினர், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'முதல்கட்டமாக, 1.2 கி.மீ., துாரத்துக்கு நிலம் அளவீடு செய்து, 'மெட்ரோ ரயில்' திட்டத்துக்கு, 24 மீட்டர் அகலத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்படும். பின், நிலத்துக்குள் உள்ள சேவை பணிகள் வேறிடத்துக்கு மாற்றப்படும். அதன்பின், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை அகலப்படுத்த உள்ளனர்' என்றனர்.

