sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிதிலமடைந்த சாலை; பொதுமக்கள் அதிருப்தி

/

சிதிலமடைந்த சாலை; பொதுமக்கள் அதிருப்தி

சிதிலமடைந்த சாலை; பொதுமக்கள் அதிருப்தி

சிதிலமடைந்த சாலை; பொதுமக்கள் அதிருப்தி


ADDED : செப் 18, 2025 09:44 PM

Google News

ADDED : செப் 18, 2025 09:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; சூளேஸ்வரன்பட்டி - ஜோதிநகர் இடையிலான சாலை மோசமடைந்து காணப்படுவதால், அதனை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டியில் இருந்து, ஜோதிநகருக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை, சுற்றுப்பகுதி கிராமங்களைச் சென்றடையும் வகையில் முக்கிய வழித்தடமாக உள்ளது.

ஆனால், இந்த சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர தேவைக்காக கிராம மக்கள் இவ்வழியே எளிதில் செல்ல முடியாமல் திணறுகின்றனர். மக்கள் கூறுகையில், 'இவ்வழித்தடத்தில் சில ஆண்டுகளுக்கு முன், தார் சாலை அமைக்கப்பட்டது. முறையாக பராமரிக்காததால், தற்போது சாலை முழுவதும் மோசமாக உள்ளது.

மழை பெய்தால் பள்ளங்கள் இருப்பது தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், இவ்வழியே இயக்கப்படும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. வாகனங்களில், இரவு நேரங்களில் அவசர தேவைக்கு விரைந்து செல்ல முடிவதில்லை. புதிதாக சாலை அமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us