sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தினமலர் -- பட்டம் 'வினாடி வினா' போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவிகள் அபாரம்

/

தினமலர் -- பட்டம் 'வினாடி வினா' போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவிகள் அபாரம்

தினமலர் -- பட்டம் 'வினாடி வினா' போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவிகள் அபாரம்

தினமலர் -- பட்டம் 'வினாடி வினா' போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவிகள் அபாரம்


ADDED : நவ 05, 2025 10:58 PM

Google News

ADDED : நவ 05, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: துடியலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம் குடியிருப்பு மனை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சரவணம்பட்டி சார்ஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற, 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா நிகழ்ச்சியில், மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்', இந்துஸ்தான் கல்விக்குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில், பள்ளி மாணவ-மாணவியரின் பாடப்பகுதி அறிவு, பொது அறிவு திறன்களை மேம்படுத்தவும், பாடங்கள் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

துடியலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற, முதல் சுற்று எழுத்துத் தேர்வில் 50 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இரண்டாவது சுற்றில் எட்டு அணிகளில் இருந்து, 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

'எச்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் முகமது ஹூசேன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இவர்களுடன் 'எப்' அணியின் சாய் சரண்யா, தன்யா; 'டி' அணியின் சாய் அஸ்வந்த், தியாஷ்; 'இ' அணியின் குமரன், சக்தி ஸ்ரீ; 'ஜி' அணியின் தரணிஷா, அனுஷ்கா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளித் தலைமையாசிரியை சுந்தரம்மாள் பரிசுகள் வழங்கினார்.

கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்துத் தேர்வில், 100 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இரண்டாவது சுற்றில் எட்டு அணிகளில் இருந்து, 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

'எச்' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர்கள் மவுலி ஹர்ஷத், மருதமலை ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இவர்களுடன், 'எப்' அணியின் சாதனாஸ்ரீ, உருவாட்டி காளீஸ்வரி; 'ஜி' அணியின் சுதர்சன், டேனியல் பவுல்ராஜ்; 'சி' அணியின் பிரணவ், ஈஸ்வரபாண்டியன்; 'டி' அணியின் மதன் கார்த்திக், அஜீஷ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளித் தலைமையாசிரியை (பொறுப்பு) கீதாலட்சுமி பரிசுகள் வழங்கினார்.

ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில் 50 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இரண்டாவது சுற்றில் எட்டு அணிகளில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

'இ' அணியின் ஆறாம் வகுப்பு மாணவன் பிரிதிவிக் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவன் யுவன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இவர்களுடன், 'பி' அணியின் சஞ்சனா, நுஸ்ரதர்ஷா; 'ஜி' அணியின் ஹர்ஷித்ரேயா, லலித்யா; 'ஏ' அணியின் மார்க்ஸ், இளமாறன்; 'எச்' அணியின் யாதவன், ஹர்ஷஸ்ரீ ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தலைமையாசிரியர் தமிழ்செல்வன் பரிசுகள் வழங்கினார்.

மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவியருக்காக, இப்போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளது. 'இப்போட்டியின் மூலம் நாட்டு நடப்புகள், நவீன தொழில்நுட்பம், அரிய செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என, பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us