/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பண்ணை நிலம் வாங்கினால் வீடு இலவசம் என அறிவிப்பு
/
பண்ணை நிலம் வாங்கினால் வீடு இலவசம் என அறிவிப்பு
ADDED : நவ 05, 2025 10:58 PM

கோவை: ஸ்கைராண்ட் பிராப்பர்டீஸ் நிறுவனம், தொண்டாமுத்துார் தேவராயபுரத்தில், ஸ்கைராண்ட் லீகசி என்ற பெயரில், பண்ணை நில விற்பனையை துவக்கியுள்ளது.
விழாவை, ஸ்ரீ ராம்கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராம்தாஸ் துவக்கி வைக்க, ஸ்கைராண்ட் லீகசி கிளப் ஹவுசை ரவிஜி திறந்து வைத்தார்.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் பின்னணியில், இயற்கை எழில் மிகுந்த இடத்தில் பண்ணை நிலம் அமைந்துள்ளது. முழுமையான பாதுகாப்பு வசதிகளுடன், தெரு விளக்குகள், நடைபாதை, பசுமை பூங்கா, விளையாட்டு உபகரணங்கள் பல்வேறு விளையாட்டுகளை உள்ளடக்கிய கிளப் ஹவுஸ், கம்யூனிட்டி ஹால், பார்பிக்யூ, கேம்ப் பயர் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
துவக்க விழா சிறப்பு சலுகையாக, பண்ணை நிலத்தினை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 420 சதுர அடியில், 1பி.எச்.கே., பாட் (pod) வீடு இலவசமாக வழங்கப்படும். விவரங்களுக்கு, 99275 52755 மற்றும் 91423 88388 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்கைராண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் கோவை பாபு செல்வகுமார், ஆனந்த வடிவேல் மற்றும் இயக்குனர்கள் சாந்தகுமார், சதீஷ்குமார் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

