/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி; அசத்திய பள்ளி மாணவ, மாணவியர்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி; அசத்திய பள்ளி மாணவ, மாணவியர்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி; அசத்திய பள்ளி மாணவ, மாணவியர்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி- வினா போட்டி; அசத்திய பள்ளி மாணவ, மாணவியர்
ADDED : டிச 12, 2024 06:13 AM

கோவை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பதிலளித்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும், 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான 'வினாடி வினா போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்து வருகிறது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது.
முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளி களில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில், பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும்.
இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
*நாகினி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த வினாடி-வினா போட்டியில், 80 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த, 11ம் வகுப்பு மாணவர் தீர்த்தா கிருஷ்ணா, 9ம் வகுப்பு மாணவர் லோகித் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மரியா ராணி, தீபா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
* ஹிந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில், 33 பேர் தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். போட்டியின் நிறைவில், 'எச்' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர்கள் ரூபேஷ் குமார், வெற்றி செல்வம் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் செண்பகவள்ளி பரிசுகள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் யசோதா உடனிருந்தார்.
* ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியில், 54 பேர் தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். போட்டி முடிவில், 'எப்' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் அகஸ்தியன், ஆறாம் வகுப்பு மாணவர் மகிழன் ஆகியோர், முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் சுஜா பரிசுகள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் வைஜெயந்தி, ஆசிரியர்கள் காவியா, ரதிபிரியா, யோகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

