sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி; பதில் சொல்லி, பரிசை வென்ற சாந்தி பள்ளி மாணவர்கள்

/

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி; பதில் சொல்லி, பரிசை வென்ற சாந்தி பள்ளி மாணவர்கள்

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி; பதில் சொல்லி, பரிசை வென்ற சாந்தி பள்ளி மாணவர்கள்

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி; பதில் சொல்லி, பரிசை வென்ற சாந்தி பள்ளி மாணவர்கள்


ADDED : டிச 01, 2024 10:55 PM

Google News

ADDED : டிச 01, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டி பொள்ளாச்சி சாந்தி ஐ.சி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை, பட்டம் இதழ் தினமும் பள்ளிகளில் கிடைக்கும்.

இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை விரிவுப்படுத்தும் வகையிலும், 2018 முதல், 'மெகா வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.

நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், பொள்ளாச்சி ஜோதிநகர் சாந்தி ஐ.சி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்.,கல்வி நிறுவனம் கரம் கோர்த்துள்ளது. 'கோ - ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.

பள்ளியில் நடந்த வினாடி - வினா போட்டியில், 68 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேரை, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.மூன்று கட்டங்களாக நடந்த இப்போட்டியில், முதல் பரிசை, 'இ' அணியை சேர்ந்த, 7ம் வகுப்பு மாணவர்கள் தரண், அக் ஷய் ஆகியோர் வென்றனர்.

போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை, பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் ரேவதி, பொற்கொடி, பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, ஆசிரியர்கள் தேவி ஸ்ரீ ஆண்டாள், ராஜலட்சுமி ஆகியோர் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.

முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும்.

அறிவு துாண்டல்


பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி கூறியதாவது:

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ், அனைவரும் விரும்பும் நாளிதழாக உள்ளது. மாணவர்களிடம் படிக்கும் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது. புதுப்புது தகவல்களை தெரிந்து கொள்ள 'பட்டம்' இதழ் உதவுகிறது. மாணவர்கள் அறிவுத்திறமையை மேம்படுத்த உதவியாக உள்ளது. அறிவு பொக்கிஷமாக உள்ள பட்டம் இதழ், வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

'பட்டம்' இதழில் ஒவ்வொன்றும் புதுமை!

மாணவர் தரண்: 'பட்டம்' இதழ், எங்களது அறிவுத்தேடலுக்கு உதவியாக உள்ளது. அனைத்து விதமான தகவல்களும் ஒரே இதழில் கிடைப்பதால், அறிவுத்திறனை மேம்படுத்த உதவுகிறது. முதல் பக்கம் முதல், கடைசி பக்கம் வரை அனைத்து தகவல்களையும் படிக்கிறேன். வினாடி - வினா போன்ற போட்டிகளில் பங்கேற்க உதவியாக இந்த இதழ் உள்ளது. இறுதிப்போட்டியிலும் வெல்ல முயற்சிகளை மேற்கொள்வேன்.மாணவர் அக் ஷய்: 'பட்டம்' இதழ் எளிமையாகவும், புதுமையாகவும் இருப்பதால், விரும்பி படிக்க முடிகிறது. ஒவ்வொரு தகவல்களும் புதுமையாக இருப்பதால் படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது. 'பட்டம்' வாசிப்பது, எனது பொது அறிவை மேம்படுத்த உதவியாக உள்ளது.வினாடி - வினா இறுதி போட்டியில் வெல்வதை இலக்காகக்கொண்டு முயற்சி மேற்கொள்வேன்.








      Dinamalar
      Follow us