/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அபாரம்
/
தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அபாரம்
தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அபாரம்
தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அபாரம்
ADDED : நவ 20, 2025 02:42 AM

கோவை: கோவை மேட்டூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஈச்சனாரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், நடைபெற்ற தினமலர் பட்டம் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி வினா நிகழ்ச்சியில், மாணவ - மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம், இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவியரின் பாடப்பகுதிகள் சார்ந்த உள்ளார்ந்த சிந்தனை திறன் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தவும், படிப்பின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், இது போன்ற வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன்படி, மேட்டூர் , ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மேட்டூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில், 110 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள், எட்டு அணிகளாக பிரிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
'ஏ' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவிகள் விதர்ஷ்ணா மற்றும் சுபஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
இவர்களுடன், 'எப்' அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் தீக் ஷித் ஆனந்த் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி அனாமிக்கா; 'சி' அணியை சேர்ந்த எட்டம் வகுப்பு மாணவி ஸ்ரீ லட்சுமி மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி தன்யா ஸ்ரீ; 'எச்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி சாதனா ஸ்ரீ மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி அபினயா; 'ஜி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் இமானுவேல் மற்றும் ஸ்ரீ அருண் கதிர் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தலைமையாசிரியை தமிழ்செல்வி பரிசுகள் வழங்கினார்.
ஈச்சனாரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற முதற் சுற்று எழுத்து தேர்வில், 85 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள், எட்டு அணிகளாக பிரிந்து, இறுதி சுற்றில் பங்கேற்றனர் .
'டி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி வைஷாலி மற்றும் எட்டம் வகுப்பு மாணவி லட்சுமி பிரபா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
இவர்களுடன், 'எப்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் ராஜலட்சுமி மற்றும் திவ்யதர்ஷனி; 'ஏ' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி சஞ்சனா ; 'பி' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர்கள் சுவேதாஸ்ரீ மற்றும் புவரசன்; 'எச்' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஷாஹினா மற்றும் சக்திஸ்ரீ ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தலைமையாசிரியர் ராஜூ பரிசுகள் வழங்கினார்.

