/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - -வினா: மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - -வினா: மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - -வினா: மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - -வினா: மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : நவ 28, 2025 04:56 AM

பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் -- பரிசை வெல்' மெகா வினாடி --- வினா போட்டி, பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்துாரில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வித்யா மந்திர் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
மாணவர்களின் கற்றல் ஆர்வம் மற்றும் நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி -- -வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன.
இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணியினர், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப் போட்டியில் பங்கேற்பர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்துாரில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வித்யா மந்திர் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்படும், மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது. தகுதிச்சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளி அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.
மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'ஜி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற 9ம் வகுப்பு மாணவர்கள் மித்தான்ஸ் டியோரா, விதேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகி சரண்யா, முதல்வர் பத்மபிரியா, ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுசாமி, பானுமதி, ஆசிரியர் மங்கை ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
பயனுள்ள இதழ்! பள்ளி முதல்வர் பத்ம பிரியா: 'தினமலர் -பட்டம்' இதழ், மாணவர்களின் படிப்பு மற்றும் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. 'பட்டம்' இதழில் வெளிவரும் பல்வேறு அறிவு சார்ந்த விபரங்கள், மாணவர்களின் அறிவு பசிக்கு உணவாக உள்ளது. வளர்ந்து வரும் 'ஏஐ' தொழில்நுட்பத்துக்கு இணையாக மாணவர்களின் அறிவை வளர்த்து கொள்ளவும், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவும் 'பட்டம்' இதழ் பெரிதும் உதவுகிறது.

