sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தினமலர் - பட்டம் 'பதில் சொல் - பரிசை வெல்' சிறந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி

/

தினமலர் - பட்டம் 'பதில் சொல் - பரிசை வெல்' சிறந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி

தினமலர் - பட்டம் 'பதில் சொல் - பரிசை வெல்' சிறந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி

தினமலர் - பட்டம் 'பதில் சொல் - பரிசை வெல்' சிறந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி


ADDED : நவ 09, 2025 01:00 AM

Google News

ADDED : நவ 09, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ் கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், மாரண்ண கவுண்டர் மெட்ரிக் பள்ளி, என்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவதார் பப்ளிக் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ-மாணவிகள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பாடப்பகுதிகள் சார்ந்த பகுத்தறிவு, மொழித்திறன், சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு உள்ளிட்ட திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. கல்வி மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' சார்பில் இத்தகைய வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி அளவில் நடைபெறும் முதல் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு செல்கின்றன. அதில் தேர்வாகும் எட்டு அணியினர் இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

மாரண்ண கவுடர் மெட்ரிக் பள்ளி காந்திபார்க்கில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 194 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'ஏ' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் கிஷோர் கார்த்திக் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பாலஹரிநாத் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி முதல்வர் சுரேஷ் கனி, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

என்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நீலிகோணம்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில், நடைபெற்ற தகுதி சுற்றில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'பி' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஷிஜின் கே. ஷிஜு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவன் சாய் சரன் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி முதல்வர் ஜெயராமன், இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

அவதார் பப்ளிக் பள்ளி செட்டிபாளையத்தில் உள்ள இப்பள்ளியில், நடைபெற்ற தகுதி சுற்றில் 153 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'இ' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஜபேஷ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி தாளாளர் செந்தில்குமார், இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

மாணவர்கள் அசத்தல்

'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ் கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வினாடி-வினா போட்டியில், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us