/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியர் யார்
/
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியர் யார்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியர் யார்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியர் யார்
ADDED : டிச 17, 2024 06:08 AM

கோவை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும், 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடந்து வருகிறது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. தற்போது, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் காத்திருக்கின்றன.
* பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர்., கே.பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 87 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'எப்' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர்கள் அதோனி, விஷ்ணு ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் ஷீலா ஸ்டீபன், பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பமீலா ரோஸ்லின், ஆசிரியர் சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
* பீளமேடு பி.எஸ்.ஜி.ஆர்., சர்வஜனா மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 250 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'ஜி' அணியை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவி வர்ஷா, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீதர்ஷிணி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி செயலாளர் நாராயணசாமி, தலைமையாசிரியர் சசிகுமார், உதவி தலைமையாசிரியர்கள் பங்கஜம், மரகதம், மஞ்சுளா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
* சிங்காநல்லுார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் சரவணம்பட்டி, நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 282 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'டி' அணியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர்கள் பிரானேஷ், ரவி சுதர்ஷன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் கீதா பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெய்வமணி, ஆசிரியர்கள் மணிகண்டன், ஹேமலதா, பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

