/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதிபெற்ற மாணவ, மாணவியர்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதிபெற்ற மாணவ, மாணவியர்
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதிபெற்ற மாணவ, மாணவியர்
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி - வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதிபெற்ற மாணவ, மாணவியர்
ADDED : நவ 05, 2024 11:21 PM

கோவை, : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த, 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த மாதம், 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. தற்போது, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டுவருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும்.
இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
நேற்று, சின்னவேடம்பட்டி, டி.கே.எஸ்., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 65 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'ஜி' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர் திவாகர், எட்டாம் வகுப்பு மாணவி கமாலிகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சுஜாதா பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி, ஆசிரியர் ராஜலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல், கரும்புக்கடை, ஜீவன்ஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், 60 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'பி' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவி வபா நஸ்ரின், எட்டாம் வகுப்பு மாணவி அஜ்னா பாத்திமா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சிவக்குமரன், நிர்வாக அலுவலர் முஹம்மது ரியாஜூதின் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். கல்வி ஒருங்கிணைப்பாளர் அஸ்மா பிர்தவுஸ், கூடுதல் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷம்மா பானு ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், சரவணம்பட்டி, விக்டரி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த வினாடி-வினா நிகழ்ச்சியில், 50 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவர் நிசாந்த், எட்டாம் வகுப்பு மாணவி ரியா சார்மி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி ஒருங்கிணைப்பாளர் கோமதி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தீபா, ஆசிரியர்கள் மாணிக்கம், பவானிஆகியோர் உடனிருந்தனர்.