sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குறுந்தொழிலுக்கு உதவ தடையற்ற மின்சாரம் :"டாக்ட்' சங்கம் வலியுறுத்தல்

/

குறுந்தொழிலுக்கு உதவ தடையற்ற மின்சாரம் :"டாக்ட்' சங்கம் வலியுறுத்தல்

குறுந்தொழிலுக்கு உதவ தடையற்ற மின்சாரம் :"டாக்ட்' சங்கம் வலியுறுத்தல்

குறுந்தொழிலுக்கு உதவ தடையற்ற மின்சாரம் :"டாக்ட்' சங்கம் வலியுறுத்தல்


ADDED : ஆக 11, 2011 11:22 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'கோவை உட்பட தமிழகத்தில் குறுந்தொழில் அதிகளவில் இயங்கும் பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்து, காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பாலமாக இருந்து செயல்படும் தமிழக அரசுக்கு 'டாக்ட்' நன்றி தெரிவிக்கிறது. தமிழக முதல்வரின் அறிவிப்பால், பெரும் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு, குறு சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கோவை உட்பட தமிழகத்தில் குறுந்தொழில் அதிகளவில் இயங்கும் பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் இரண்டு மணி நேரம் மின்நிறுத்தம் செய்வதை தவிர்த்து, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us