/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; ஆர்வமுடன் பதிலளித்து அசத்திய மாணவ, மாணவியர்
/
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; ஆர்வமுடன் பதிலளித்து அசத்திய மாணவ, மாணவியர்
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; ஆர்வமுடன் பதிலளித்து அசத்திய மாணவ, மாணவியர்
'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா போட்டி; ஆர்வமுடன் பதிலளித்து அசத்திய மாணவ, மாணவியர்
ADDED : நவ 26, 2024 11:53 PM

கோவை; 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நேற்று நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பதிலளித்து அசத்தினர்.
'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த, 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த மாதம், 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டுவருகிறது.
இதில், பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும்.
இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. நேற்று, மேட்டுப்பாளையம் மகாஜனா மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி-வினா போட்டியில், 191 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியின் நிறைவில், 'பி' அணியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவர் தியான், எட்டாம் வகுப்பு மாணவர் விக்ரம் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு கணித ஆசிரியர் ரங்கநாதன் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் தீபா, விமலா ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல், மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில், 110 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
போட்டியின் நிறைவில், 'எப்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவியர் கனிஷ்கா, மவுலிகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சுலோக்சனா பரிசுகள் வழங்கினார். தமிழ் ஆசிரியை சாந்தி, புவியியல் ஆசிரியை சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.