sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா: இன்று இறுதிப் போட்டி; 'வெல்லப்போவது யார்?'

/

'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா: இன்று இறுதிப் போட்டி; 'வெல்லப்போவது யார்?'

'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா: இன்று இறுதிப் போட்டி; 'வெல்லப்போவது யார்?'

'தினமலர்-பட்டம்' மெகா வினாடி-வினா: இன்று இறுதிப் போட்டி; 'வெல்லப்போவது யார்?'


ADDED : ஜன 24, 2025 06:25 AM

Google News

ADDED : ஜன 24, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' சார்பில் நடந்துவந்த 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி-வினா முதற்கட்ட போட்டிகளை அடுத்து இன்று எஸ்.எஸ்.வி.எம்., வோர்ல்டு பள்ளியில் இறுதிப்போட்டி நடக்கிறது.

பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. இதை வாசிக்கும் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் விதமாகவும், தேர்வுக்கு தயாராகும் விதத்திலும் கடந்த, 2018 முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது.

அந்த வகையில், 2024-25ம் ஆண்டுக்கான 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் சார்பில் கடந்தாண்டு அக்., 8ம் தேதி துவங்கியது.

இவர்களுடன், 'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு முதற்கட்டமாக பொது அறிவுத்தேர்வு நடத்தப்பட்டது.

இதிலிருந்து, ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடம் பிடித்த அணி அரையிறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. காலிறுதி சுற்றுக்களை அடுத்து இன்று, 150க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்கும் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி, கோவை, சிங்காநல்லுார் - வெள்ளலுார் ரோட்டில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., வோர்ல்டு பள்ளியில் நடக்கிறது.

காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், 150க்கும் மேற்பட்ட பள்ளி அணிகளுக்கு பொது அறிவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெறும் எட்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படும்.

இறுதிச்சுற்றில் அதிக புள்ளிகளுடன் வெற்றிபெறும் அணிகளுக்கு, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பரிசுகள் வழங்கி கவுரவிக்கிறார். இதில், ஏற்கனவே பதிவு செய்த பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பரிசுகள் தாராளம்!

முதல் பரிசாக ஆப்பிள் மேக் புக் புரோ, இரண்டாம் பரிசாக லேப்டாப், மூன்றாம் பரிசாக ஸ்மார்ட் டேப் வழங்கப்படுகிறது. நான்கு முதல் எட்டாம் இடம் வரை பிடிக்கும் அணிகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த எட்டு அணிகள் தவிர, அரையிறுதியில் அதிக மதிப்பெண் பெறும், 25 அணிகளுக்கும், சரியான பதில் அளிக்கும் பார்வையாளர்களுக்கும் பரிசுகள் காத்திருக்கின்றன.








      Dinamalar
      Follow us