sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டி: திறமையான மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி

/

தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டி: திறமையான மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி

தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டி: திறமையான மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி

தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டி: திறமையான மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி


ADDED : நவ 01, 2025 12:34 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ் கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், வேடப்பட்டி பி.எஸ்.ஜி. உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கல்வி மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' சார்பில் இத்தகைய வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 150க்கு மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பள்ளி அளவிலான சுற்றில், வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றன. அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

இதன் ஒரு பகுதியாக, வேடப்பட்டி பி.எஸ்.ஜி. உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, தகுதி சுற்றில் 95 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகள் எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'டி' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியில் இடம்பெற்ற எட்டாம் வகுப்பு மாணவிகள் தனிக் ஷா மற்றும் பிரியா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற, அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி முதல்வர் பரிமளா பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இப்போட்டிக்கு, எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் கல்வி இணை நிறுவனமாகவும், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனங்கள் பரிசு வழங்குநர்களாகவும் இணைந்துள்ளன.






      Dinamalar
      Follow us