/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அம்மாக்களும், குழந்தைகளும் பங்கேற்க வேண்டிய கருத்தரங்கு நாளை 'தினமலர்' நடத்துகிறது
/
அம்மாக்களும், குழந்தைகளும் பங்கேற்க வேண்டிய கருத்தரங்கு நாளை 'தினமலர்' நடத்துகிறது
அம்மாக்களும், குழந்தைகளும் பங்கேற்க வேண்டிய கருத்தரங்கு நாளை 'தினமலர்' நடத்துகிறது
அம்மாக்களும், குழந்தைகளும் பங்கேற்க வேண்டிய கருத்தரங்கு நாளை 'தினமலர்' நடத்துகிறது
ADDED : செப் 28, 2024 05:03 AM
கோவை: அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்குமான விழிப்புணர்வு கருத்தரங்கு, தினமலர் நாளிதழ் சார்பில், நாளை நடக்கிறது. அனுமதி இலவசம்.
மக்கள் நலனில் அக்கறையுடன், கோவை நவ இந்தியா எஸ்.என்.ஆர்., ஆடிட்டோரியத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து, இந்த பயனுள்ள கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
'காக்க... காக்க கண், மனநலம் காக்க' என்ற இந்த கருத்தரங்கில், 'தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி' என்பது குறித்து, பிரபல மனநல டாக்டர் மோனி ஆலோசனை வழங்குகிறார்.
அதேபோல, 'மொபைல் போன் பாதிப்பில் இருந்து கண்களை காப்பது எப்படி' என்பது குறித்து, டிரினிட்டி மருத்துவமனை கண் டாக்டர் அனுஷா ராஜ்குமார், 'உடல் சோர்விலிருந்து காப்பது எப்படி' என்பது குறித்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் அருணாதேவி, 'தனித்திறன்களை வளர்த்து படிப்பில் சாதிப்பது எப்படி' என்பது குறித்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை உளவியல் ஆலோசகர் பார்வதி வைத்தியநாதன் ஆகியோர், ஆலோசனை வழங்குகின்றனர்.
நாளை காலை, 10:30 முதல், 12:30 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் பங்கேற்க, அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு, 88702 60003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.