sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'தினமலர்' சார்பில் அக்.2ம் தேதி நடக்கிறது வித்யாரம்பம் நிகழ்ச்சி

/

'தினமலர்' சார்பில் அக்.2ம் தேதி நடக்கிறது வித்யாரம்பம் நிகழ்ச்சி

'தினமலர்' சார்பில் அக்.2ம் தேதி நடக்கிறது வித்யாரம்பம் நிகழ்ச்சி

'தினமலர்' சார்பில் அக்.2ம் தேதி நடக்கிறது வித்யாரம்பம் நிகழ்ச்சி


ADDED : செப் 21, 2025 11:31 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; 'தினமலர்' மாணவர் பதிப்பின் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வரும், 2ம் தேதி நடக்க உள்ளது.

விஜயதசமியன்று, வித்யாரம்பம் நிகழ்ச்சியின் வாயிலாக, அறிவுப்பாதைக்கு பிள்ளையார் சுழி போடப்படும் நிகழ்வு, மனதில் இருந்து மறையாது. இந்தாண்டு, 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, வரும் 2ம் தேதி நடக்கவுள்ளது.

ராம்நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கத்தில், காலை 7:35 மணியிலிருந்து, காலை 10:00 மணி வரை, வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அனுமதி இலவசம்.

டாக்டராக, இன்ஜினியராக, கலெக்டராக மாற உள்ள குட்டிக் குழந்தைகள், சரஸ்வதிதேவியின் கடாட்சம் முழுமையாக பெற்று, தங்கள் கல்வி பயணத்தை துவக்கவே, இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க, குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல்போன் எண் ஆகியவற்றை, 95666 97267 என்ற எண்ணில், காலை 10:00 முதல் மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us