/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் உளவியல் ஆசிரியர் நியமிக்கும் கோர்ட் உத்தரவை மதிக்காததால் அவலம்
/
பள்ளிகளில் உளவியல் ஆசிரியர் நியமிக்கும் கோர்ட் உத்தரவை மதிக்காததால் அவலம்
பள்ளிகளில் உளவியல் ஆசிரியர் நியமிக்கும் கோர்ட் உத்தரவை மதிக்காததால் அவலம்
பள்ளிகளில் உளவியல் ஆசிரியர் நியமிக்கும் கோர்ட் உத்தரவை மதிக்காததால் அவலம்
ADDED : மார் 29, 2025 11:38 PM
கோவை: பள்ளிகளில் உளவியல் நிபுணரை நியமிக்க வேண்டுமென்ற, நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தாததால், பாலியல் பலாத்கார பாதிப்புக்கு உள்ளாகும் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் சிறுமியர், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, பள்ளிகளில் வக்கிர புத்தியுள்ள சில ஆசிரியர்கள், மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது கொடுமையானது.
அவர்கள் மீது 'போக்சோ' பாய்ந்தாலும், பாதிப்புக்கு ஆளாகும் மாணவியர் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகின்றனர். கோவை மாநகரில், 2024ம் ஆண்டில் மட்டும், 156 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. 2023ல், 132 வழக்குகளும், 2022ல், 85 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவியரின் மன நலன்களை மேம்படுத்தும் உளவியல் நிபுணர்களை, பள்ளிதோறும் நியமிக்கும் கோரிக்கை, தற்போது வலுத்துள்ளது.
தமிழ்நாடு உளவியல் சங்கத் தலைவர் பாலமுருகன் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரி மாணவர்களில் குறிப்பாக, 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள், ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும், 'போக்சோ'வின் கீழ் ஆசிரியர்கள் கைது செய்யப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள் தங்களது ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ சொல்லத் தயங்குகின்றனர்.
இச்சூழலில், உளவியல் நிபுணர்கள் அல்லது மனநல ஆலோசகர்களின் அரவணைப்பு, மாணவியரின் பாதுகாப்புக்கும், துணிந்து புகார் அளிக்கவும் தைரியம் தரும். மாணவ, மாணவியரிடம் தற்கொலை விகிதங்கள் குறையும்.
2015, மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி (வ.எண்:15850)அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டாயம், உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும். ஆனால், இந்த உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை.
கடந்த, 1990களில் பிளஸ்1, பிளஸ்2 வகுப்பில் உளவியல் பாடம் இருந்துள்ளது; அதன் பிறகு ஏன் அகற்றினர் என்று தெரியவில்லை.
பள்ளி உளவியல் நிபுணர்கள், உளவியல் கல்வி வாயிலாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாதிப்புகளை தவிர்க்க முடியும். எனவே, உளவியல் நிபுணர்களை பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள் தங்களது ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ சொல்லத் தயங்குகின்றனர். இச்சூழலில், உளவியல் நிபுணர்கள் அல்லது மனநல ஆலோசகர்களின் அரவணைப்பு, மாணவியரின் பாதுகாப்புக்கும், துணிந்து புகார் அளிக்கவும் தைரியம் தருகிறது. மாணவ, மாணவியரிடம் தற்கொலை விகிதங்களை குறைக்கிறது.