/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கரா கல்லுாரியில் கலந்துரையாடல்
/
சங்கரா கல்லுாரியில் கலந்துரையாடல்
ADDED : டிச 31, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி, எம்.பி.ஏ., பிரிவு சார்பில், வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு, கல்லுாரி அரங்கில் நடந்தது.
பெங்களூரு ஐ.என்.சி., நிறுவன சீனியர் புராடக்ட் மேனேஜர் பகவதி நாகராஜன் தலைமை வகித்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிசினஸ் அனலிடிக்ஸ் பொறுப்பு வகிப்பவர்களுக்கு தேவையான பன்முகத்திறன், பணியின் முக்கியத்துவம், தகவல் தொழில்நுட்பத்திற்கும், வணிகத்திற்கும் இடையே உள்ள செயல்பாடுகள், பகுப்பாய்வு, தரவுகளின் முக்கியத்துவம், தொடர் கற்றலின் அவசியம்குறித்து, கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது.
இந்நிகழ்வில், எம்.பி.ஏ., பிரிவு பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.