ADDED : நவ 18, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -: கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், நடந்த குழந்தைகள் தின விழாவில், நிறுவனம் சாரா பராமரிப்பு திட்டத்தில் உள்ள குழந்தைகள் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற குழந்தைகளுடன் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால், பெற்றோர்கள் இருவரையும் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், நிறுவனம் சாரா பராமரிப்பின் கீழ் நிவாரண நிதி வழங்கப்பட்ட, 650 குழந்தைகள் மற்றும் நிதி ஆதரவுத் திட்டத்தில், 285 என மொத்தம் 935 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். இதில் இரண்டாவது கட்டமாக, 92 குழந்தைகள் உடன் இந்த கலந்துரையாடலும், அவர்களுக்கான மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

