/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளிக்கு விருது வழங்கல்
/
அரசு பள்ளிக்கு விருது வழங்கல்
ADDED : நவ 18, 2025 03:32 AM
கிணத்துக்கடவு: தமிழக அரசு சார்பில், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 2024-25ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிறந்த அரசு பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
வட்டார கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல், கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் பங்களிப்பது உள்ளிட்ட, 60 முதல் 65 பிரிவுகளின் கீழ் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.
இவ்விருதை தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர்களிடமிருந்து, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராணி மற்றும் ஆசிரியர் மகாலிங்கம் பெற்றுக்கொண்டனர்.

