sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நோய் வருவதில்லை; நாம் அழைக்கிறோம்: 'நலந்தானா' கருத்தரங்கில் விளக்கம்

/

நோய் வருவதில்லை; நாம் அழைக்கிறோம்: 'நலந்தானா' கருத்தரங்கில் விளக்கம்

நோய் வருவதில்லை; நாம் அழைக்கிறோம்: 'நலந்தானா' கருத்தரங்கில் விளக்கம்

நோய் வருவதில்லை; நாம் அழைக்கிறோம்: 'நலந்தானா' கருத்தரங்கில் விளக்கம்


ADDED : ஜூலை 07, 2025 12:48 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'நலந்தானா' என்ற பெயரில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, கோவை கிக்கானி பள்ளி அரங்கில் கடந்த இரண்டு நாட்கள் நடந்தது.

இரண்டாம் நாளான நேற்று புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் மற்றும் இருதயநோய் மருத்துவர் முரளீதரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

பாலமுருகன் பேசுகையில், ''உடல் பருமன் அதிகரித்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. நமது உணவு முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். புற்றுநோய் குறித்து அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும்,'' என்றார்.

முரளீதரன் பேசுகையில், ''மாரடைப்பு ஏற்பட்டால் முதல் ஒரு மணிநேரம் 'தங்கம்' ஆக பார்க்க வேண்டும். எப்போது, சிறு சந்தேகம் இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

நமது, சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது உள்ள சூழலில் நோய் நமக்கு வருவதில்லை; நாம் தான் நோயை அழைக்கிறோம். உணவு முறை மாற்றம், தினசரி நடைபயிற்சி போன்றவை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us