/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோதவாடி குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாததால் அதிருப்தி
/
கோதவாடி குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாததால் அதிருப்தி
கோதவாடி குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாததால் அதிருப்தி
கோதவாடி குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாததால் அதிருப்தி
ADDED : செப் 24, 2025 11:29 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி குளத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பகுதியை மீட்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு, கோதவாடி குளம், 384 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. ஆனால், தற்போது ஒரு சில பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதில், 1984, 1987 ஆண்டின் படி நடந்த அளவீட்டில் இக்குளம், 150 ஏக்கர் பரப்பளவில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 1912 - 13 ஆண்டு (பழைய ஆர்.எஸ்.ஆர்) படி மறு அளவீடு செய்து குளத்தின் பரப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை காக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கடந்த ஆண்டு ஜமாபந்தி மற்றும் பிற முகாம்களில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அளவீடு பணி மேற்கொள்ள தற்போது வரை எந்த அதிகாரிகளும் வரவில்லை.
இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
கோதவாடி குளம், வடசித்தூர் மற்றும் குருநல்லிபாளையம் கிராம பகுதிகளில் அமைந்துள்ளது. இக்குளத்தில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை.
குளத்தை முழுவதுமாக மீட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டால் பல கிராம மக்கள் பயன்பெறுவர்.
நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு விவசாயம் செழிப்படையும். எனவே, ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற விரைவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.