sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உருக்குலைந்த ரோட்டை சீரமைக்காததால் அதிருப்தி

/

உருக்குலைந்த ரோட்டை சீரமைக்காததால் அதிருப்தி

உருக்குலைந்த ரோட்டை சீரமைக்காததால் அதிருப்தி

உருக்குலைந்த ரோட்டை சீரமைக்காததால் அதிருப்தி


ADDED : ஜன 18, 2024 12:45 AM

Google News

ADDED : ஜன 18, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறை, தாய்முடி எஸ்டேட் செல்லும் ரோட்டை முழுமையாக சீரமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையில், சோலையாறு சித்தி விநாயகர் கோவில் அருகில் தாய்முடி எஸ்டேட் மேல்பிரட்டு அமைந்துள்ளது. 5 கி.மீ., துாரம் உள்ள இந்த ரோட்டில் பல்வேறு போராட்டத்திற்கு பின், 3 கி.மீ., துாரம் வரையிலான ரோடு, நகராட்சி சார்பில் சமீபத்தில் போடப்பட்டது.

இந்நிலையில், மீதமுள்ள 2 கி.மீ., துாரம் உள்ள ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

தொழிலாளர்கள் கூறுகையில், 'தாய்முடி பிரிவில் இருந்து சந்தன மாரியம்மன் கோவில் வரை நகராட்சி சார்பில் ரோடு போடப்பட்டுள்ளது. அங்கிருந்து, 2 கி.மீ, துாரம் உள்ள ரோட்டை சீரமைக்காததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. யானைகள் நடமாட்டம் மிகுந்த இந்த எஸ்டேட் ரோட்டை நகராட்சி சார்பில் மழை காலத்திற்கு முன்பாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us