sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சிறந்த கல்வியாளர்களுக்கு விருதுகளுடன் கவுரவம்

/

 சிறந்த கல்வியாளர்களுக்கு விருதுகளுடன் கவுரவம்

 சிறந்த கல்வியாளர்களுக்கு விருதுகளுடன் கவுரவம்

 சிறந்த கல்வியாளர்களுக்கு விருதுகளுடன் கவுரவம்


ADDED : டிச 16, 2025 05:08 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: நேரு கல்விக் குழுமத்தின், 17வது ஸ்ரீ பி.கே.தாஸ் நினைவு சிறந்த ஆசிரியர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா, திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. நேரு கல்விக் குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார்.

அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., எஸ்.ஆர்.சி., ஆலோசகர் ஜேக்கப் கல்லே, கல்வியாளர் கிருஷ்ணராஜ் வாணவராயர் விருதுகள் வழங்கினர்.

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா முழுவதும் உள்ள நிறுவனங்களிலிருந்து மொழிகள், வணிகம், மேலாண்மை, அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் தெரிவு செய்யப்பட்ட 22 பேராசிரியர்களுக்கு, சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

2025ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது, குமரகுரு நிறுவனங்களின் கிருஷ்ணராஜ் வாணவராயர் மற்றும் பாரதியார் பல்கலை கதிர்வேலு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

நேரு கல்விக் குழுமத்தின் செயலாளர் கிருஷ்ணகுமார், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us