sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பா.ஜ., விவசாய அணி சார்பில் தேங்காய் எண்ணெய் வழங்கல்

/

பா.ஜ., விவசாய அணி சார்பில் தேங்காய் எண்ணெய் வழங்கல்

பா.ஜ., விவசாய அணி சார்பில் தேங்காய் எண்ணெய் வழங்கல்

பா.ஜ., விவசாய அணி சார்பில் தேங்காய் எண்ணெய் வழங்கல்


ADDED : ஜன 21, 2024 11:55 PM

Google News

ADDED : ஜன 21, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;திருப்பூர் தெற்கு மாவட்டம் பா.ஜ., விவசாய அணி சார்பில், ரேஷன் கார்டுக்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்கும் விழா, பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் நடந்தது. விவசாய அணி பொதுச் செயலாளர் செல்வபிரபு வரவேற்றார்.

மாநில துணைத்தலைவர் குமரேசன், மாவட்ட தலைவர் விவேகானந்தன், மாவட்ட தலைவர் ரவி, மாநில செயலாளர் மவுனகுருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் பேசியதாவது:

தமிழகத்தில், ஐந்து கோடி தென்னை மரங்கள் உள்ளன. ஆனால், பாமாயில் இறக்குமதி செய்து வழங்கப்படுகிறது. இதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், ரேஷன் கடைகளில் வினியோகிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

திராவிட கட்சிகள் ஆட்சி செய்தும், தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; வறுமை ஒழிக்கப்படவில்லை. ஆனால், பிரதமர் மோடியால், இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. மற்ற கட்சிகள் போன்று பா.ஜ., அல்ல; மக்கள் நலப்பணிகளுக்காக உள்ள கட்சியாகும். தமிழகத்தை காப்பாற்ற பா.ஜ.,வால் தான் முடியும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார். தொடர்ந்து, 882 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us