sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உழவரை தேடி திட்டத்தில் 353 முகாம் நடத்தப்படும் மாவட்ட கலெக்டர் தகவல்

/

உழவரை தேடி திட்டத்தில் 353 முகாம் நடத்தப்படும் மாவட்ட கலெக்டர் தகவல்

உழவரை தேடி திட்டத்தில் 353 முகாம் நடத்தப்படும் மாவட்ட கலெக்டர் தகவல்

உழவரை தேடி திட்டத்தில் 353 முகாம் நடத்தப்படும் மாவட்ட கலெக்டர் தகவல்


ADDED : ஜூன் 01, 2025 11:00 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''முதல்வரின் 'உழவரை தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை' திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 353 முகாம்கள் நடத்தப்பட உள்ளன'' என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விரிவாக்க சேவைகளை, உழவர்களுக்கு, அவர்களது கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில், 'உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.

காங்கயம் தாலுகா, கீரனுார் ஊராட்சி, கிராம ஊராட்சி சேவை மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் கிறிஸ்துராஜ் பங்கேற்று, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கி பேசியதாவது:

புதிய தொழில்நுட்பங்களுடன், திட்டங்களை ஒருங்கிணைத்து உழவர்களிடம் எடுத்து செல்வது மிக அவசியம். பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற பிற தொழில்களையும் ஒருங்கிணைத்து, விவசாயிகள் செய்து வருகின்றனர்.

எனவே, வேளாண்மை, உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பல்கலை விஞ்ஞானிகளுடன் இணைந்து, கிராமங்களுக்கு நேரடியாக சென்று, உழவர்களை சந்தித்து, அவர்களின் தேவையறிந்து, அதற்கான திட்டங்களை வழங்கி, புதிய தொழில்நுட்பங்களை எடுத்துக்கூறுவர்.

இதன் வாயிலாக, வேளாண்மை விரிவாக்க சேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள், உழவர்களுக்கு அவர்களது கிராமங்களிலேயே வழங்கப்படும். இத்திட்டத்திற்கான முகாம், 15 நாட்களுக்கு ஓரு முறை, அதாவது, 2வது மற்றும், 4வது வெள்ளிக்கிழமைகளில், ஒவ்வொரு வட்டாரத்திலும் இரு கிராமங்களில் நடத்தப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றியங்களில், ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும், 4 கிராமங்கள் வீதம், 353 முகாம்கள் இத்திட்டம் வாயிலாக நடத்தப்படும். இதன் வாயிலாக விவசாயிகளின் தேவைகள் பூர்த்தியாவதுடன், அரசின் நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு விரைவில் சென்றடையும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

வேளாண்மை துறை சார்பில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்ககத்தின் சார்பில், 6,000 ரூபாய் மானியத்தில் சோளம் விதை; தோட்டக்கலை துறை சார்பில், 12 ஆயிரம் ரூபாய் மானியத்தில் தென்னங்கன்று; தலா, 24 ரூபாய் மானியத்தில் கத்தரி, மிளகாய் மற்றும் குழித்தட்டு நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சசிகலா, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us