sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தீபாவளி சீட்டு மோசடி; நடவடிக்கை எடுக்க மனு

/

தீபாவளி சீட்டு மோசடி; நடவடிக்கை எடுக்க மனு

தீபாவளி சீட்டு மோசடி; நடவடிக்கை எடுக்க மனு

தீபாவளி சீட்டு மோசடி; நடவடிக்கை எடுக்க மனு


ADDED : பிப் 10, 2025 10:42 PM

Google News

ADDED : பிப் 10, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; 'தீபாவளி சீட்டு மற்றும் பிற சீட்டுகள் நடத்தி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சூளேஸ்வரன்பட்டி பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.சூளேஸ்வரன்பட்டி, 3 முதல், எட்டாவது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

சூளேஸ்வரன்பட்டியில், கடந்த ஏழு ஆண்டு காலமாக தனி நபர் தீபாவளி சீட்டு மற்றும் பரிசு சீட்டுகள் நடத்தி ஏமாற்றியுள்ளார். அவர் பணம் வசூலித்த பின், சீட்டுக்கு உண்டான தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே கூலி வேலைக்கு சென்று சேர்த்த பணத்தை, ஒவ்வொருவரிடமும், 30 ஆயிரம் ரூபாய் முதல், 70ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்.

இது குறித்து, பொள்ளாச்சி போலீஸ், கோவை மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us